- Thursday, 28-March-2024
அல்லாஹ்வின் அருளால் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் சார்பில் JAQH தஃவா குழுவின் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் தஃவா துறையின் மாநிலச் செயலாளர் சகோ.S.முஹம்மது ரஃபீக் அவர்கள் தலைமையில் 27-09-21 நடைபெற்றது. நிகழ்ச்சியினை சகோ.S.M.முஜீப் ரஹ்மான் (மாநிலச் செயலாளர், மக்தப் மதரஸா) அவர்கள் தொடங்கி வைத்தார்.தஃவா பணியின் சிறப்புகளை சகோ.I.ஹனீஃபா (மாவட்டத் தலைவர், கோவை மாநகர்) அவர்கள் எடுத்துரைத்தார்.கோவை புறநகர் மாவட்டத் தலைவர் சகோ.அப்துல் ரஹீம் அவர்கள் சில ஆலோசனைகளை வழங்கினார்.கள நிலவரங்களை சகோ. முஹம்மது யாஸீஃப் (ஊட்டி) அவர்கள் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மைசூர் ஊட்டி உடுமலை பொள்ளாச்சி கோவை மாநகர் &கோவை புறநகர் மாவட்டங்களின் அனைத்து கிளைகளிலிருந்தும்சகோதரர்கள் வருகை புரிந்தனர். இந்நிகழ்ச்சியை கோவை மாநகர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிக் தஃவா சென்டரின் பொறுப்பாளர் சகோ A.காஸிம்(மாநில பிரதிநிதி) அவர்கள் மேற்பார்வையில் செல்வபுரம் JAQH கிளை மஸ்ஜிதுல் இஃக்லாஸ் நிர்வாகிகள் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தனர்.